மன்மத லீலை..

25 09 2009

மன்மத லீலை என்ற வார்த்தையை கேட்டால் அவரவர்களுக்கு ஆயிரம் கற்பனைகள் தோண்றும். அது ஒருவரின் அந்தரங்க மனது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறது என்பதை பொறுத்து அதன் கற்பனை தரம் இருக்கும். அந்த லீலைகளை ரசனையுடன் கையாள்பவர்களும் உண்டு, கவர்ச்சியாக கையாள்பவர்களும் உண்டு, காமம் மட்டுமே பிரதாணமாக கொண்டவர்களும் உண்டு,அதைவிட ஒரு படி மேலே விலங்குகளைப் போல் நடந்துகொள்பவர்களும் உண்டு.

இக்காலத்தில் மிக தெளிவாக “எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானப்பா” என்று சொல்லிக்கொள்ளும் இதே விசயத்தை மன்மதன் எனும் தேவனின் செயலாக உருவகப்படுத்தி நம் முன்னோர்கள் தனி இலக்கணங்களே வகுத்துவிட்டார்கள்.. அப்படி சொல்லபட்டதாக சமீபத்தில் படித்த சில..

காளிதாசன் – குமாரசம்பவம் – இந்திரன் சொல்வதாக..
“மன்மதா, என் வஜ்ராயுதத்தையும் உன்னையும் சமமாகவே கருதுகிறேன். இன்னும் பார்க்கப் போனால் வஜ்ராயுதத்தைவிட நீ உயர்ந்தவன். வஜ்ராயுதத்தை முனிவர்களிடம் உபயோகிக்க முடியாது. உன்னை மாமுனிவர்களிடமும் உபயோகிக்கலாம். நீ எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்புபவன்!”

“மன்மதா! நீ இல்லாதபோது மதுவில் மயங்கிய பெண்கள் செய்கிற செயல்கள் நகைப்பையே உண்டாக்கும். மது மயக்கத்தைவிடவும், நாணத்தில் சிவந்த கண்களுடன் முற்றுப் பெறாத வார்த்தைகளை, காதலுடன் ஒரு பெண் குழைந்து சொல்வதில் அதிக போதையுண்டு! ஆதலால் மன்மதா! நீயில்லாதபோது மது மயக்கம்கூட எந்த மனதையும் பரவசப்படுத்தாது.”

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – ஆண்டாள் சொல்வதாக..
“மன்மதா, வானவர்க்காக முனிவர்கள் வகுத்த யாகத்தை காட்டிலுள்ள நரிகள் சூழ்ந்து தாண்டுவதும், முகர்ந்து பார்ப்பதும் எத்தனை கொடுஞ்செயலோ அத்தனைக் கொடியது – சங்கு சக்கரதாரியான மாதவனுக்காக சிருஷ்டிக்கப்பட்ட என் அங்கங்கள் – அற்பமான மானிடவர்க்கென்று பேசப்படுவது. இதை கேட்டதிலிருந்து வாழ விருப்பமில்லாது இருக்கிறேன் நான் என்று போய் சொல்!”

ஹர்ஷவர்த்தனர் – தன் கவிதையில்
“மன்மதா, உன்னை வாசலுக்கு வெளியே நிற்கச் சொல்பவர்கள் பொய்யர்கள். மோக தாகமெடுத்த உடலுக்கு உன் மொழி தவிர வேறு மொழி புரியாது.”

குற்றாலக் குறவஞ்சி -
” நேரிழையாரையும், ஊரையும் பாரடா மன்மதா! கண்ணில் நித்திரை தானொரு சத்துருவாச்சுதே மன்மதா! அட மன்மதா!”

நாராயண பட்டர்
“மன்மதா..
இந்தக் கண்ணன் சிறு பிள்ளை. என் காதலியை இவனது சந்நிதியில் வைத்து சல்லாபிக்கக் கூடாதாம்! நீயும் இவனும் இல்லாத இடம்தான் எது சொல்லேன்!”

கோபாலகிருஷ்ண நம்பூதிரி – ரதி புராணம்
“மன்மதா!
நீ மறைந்து நிற்கிறாய்.
அவள் மயங்கி நிற்கிறாள்.
போதை தலைக்கேற,
புதுக்கனிகள் சுவைக்க,
காதல் விளையாட்டுக்கென -
இலக்கணம் வகுத்தவனே!
எங்கு போனாய்!
வா!”

அஜாத சத்ருவில்
“மன்மதா,
உன்னிடம் ஒரு வேண்டுகோள்!
நான், என் மனைவியுடன்
இருக்கும்
நேரத்தில் மட்டும்
உன் பானத்தை வீசு!
மற்ற நேரங்களில்…
கண் மறவாய் இரு.
இல்லற தர்மத்திலிருந்து
என்னை நழுவச் செய்யாதே!
உனக்கு அனந்தகோடி
நமஸ்காரங்கள்!

———————————–***———————————–


செயல்கள்

தகவல்

4 பதில்கள்

25 09 2009
veluppillai

migavum nandru!!!!!!!!!!!!!!!!!

26 09 2009
kapilashiwaa

உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

26 09 2009
ஹேமா

லதா,மன்மதனை உச்சரிக்காதவர் யாருமில்லையோ !
மன்மதலீலைக்கு நல்லதொரு விளக்கம்.

26 09 2009
kapilashiwaa

இதை படித்த போது முதலில் தோன்றிய என் கருத்தும் இதுதான் ஹேமா. மிக பெரியோர்களைக் கூட இந்த மன்மதன் விட்டு வைத்ததில்லை போலும். மிகவும் நன்றி.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.