சொல்ல ஒன்றும் இல்லை
சொல்லிக் கேட்க ஒன்றும் இல்லை
நினைக்க ஒன்றும் இல்லை
நினைத்துப் பார்க்க ஒன்றும் இல்லை
பிடித்தது ஒன்றும் இல்லை
பிடிக்கவும் ஒன்றும் இல்லை
மனமில்லை என்றாலும்
தேடி பார்த்துவிட்டேன்!
எனக்கானது எதுவும் இல்லை..
என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்..
————–***—————
கவிதை நன்றாக இருந்தது.
//’என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்.”//
இந்த கடைசி வரிகள் உணர்த்தும் செய்திகள் ஏராளம்.
நன்றி கார்த்திகேயன். மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
பிரேமா,இல்லை என்று சொல்லும்போதே ஏதோ நிறைய நிறைவாய் இருப்பதாய்த்தான் அர்த்தம்.
ஹேமா, ஏதோ நிறைவாய் இருப்பதாக நினைத்து, பின் இல்லையென்றானால் வரும் வார்த்தைகள்தான் இது . சரியாக பிடித்துவிட்டீர்கள். என்ன, காலம்தான் வேறுபடுகிறது நம் எண்ணத்தில்.
\\இருப்பதாய்த்தான்\\
இருந்ததாய்த்தான். சரிதானே தோழி.
what is the mentor for your poet
நட்பு என்ற பேர்ல டார்ச்சர் குடுக்கன்னே சில பேர் இருப்பாங்கப்பா.. அவங்கள நினைச்சிதாம்பா.
ரசனை பகிர்வு.
புரியாத புதிர்..